புதுச்சேரி, மார்ச் 19- புதுச்சேரியில் மூடிகிடக்கின்ற ஏ.எப்.டி.,சுதேசி.,பாரதி., ஆகிய பஞ்சாலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க கோரி இந்தியா கூட்டணி சார்பில் செவ்வாயன்று (மார்ச் 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஎப்டி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற பெருந்திரல் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். திமுக அமைப்பாளர்,எதிர் கட்சி தலைவர் இரா.சிவா.எம்.எல்.ஏ.,முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், விசிக செயலாளர் தேவ.பொழிலன், ம.தி.மு.க தலைவர் கபிரியேல்,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், சிஐடியு மில் தொழிலாளர் சங்க தலைவர் குணசேகரன்,ஏஐடியுசி மாநில செயலாளர் சேதுசெல்வம், நிர்வாகிகள் தினேஷ்பொன்னையா உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.