கிருஷ்ணகிரி,மே.23-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கரித்து வரும் ஆணவ படுகொலைகள், பாலியல் சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்ய அனைத்து தரப்பினர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் சுகந்தி கோரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கிட்டம்பட்டி அருகில் காதல் திருமணம் செய்து கொண்டதால் சரண்யாவின் கணவன் ஜெகனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர சம்பகத்தால் நிற்கதி யாக நிற்கும் ஜெகனின் மனைவி சரண்யாவை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் பி.சுகந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் ராணி ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகந்தி, “தமிழ்நாட்டில் சாதிய ஆணவப் படுகொலைகள், சாதியவன் கொடுமைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கிருஷ்ண கிரி இரண்டாவது இடத்தில் உள்ளது” என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபத்தில் இரண்டு கொடூர கொலை சம்பவங்களும் நில பிரபுத்துவா ஆணாதிக்க சிந்தனையில் இருந்தும், மதவாத சாதிய சிந்தனைகளான ஆதிக்க சாதிய சிந்தனைகளிலின் தொடர்ச்சியால் நடந்துள்ளது.
இதில் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள சரண்யாவிற்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட சரண்யா வுக்கு சட்ட பாதுகாப்பும் கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதுபோன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும், பிற்போக்கு சிந்தனைகளை கலை யெடுக்கவும், தொடர் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி, போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் ராதா, ஓசூர் மாநகரச் செயலாளர் ரத்தினா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.