திருவண்ணாமலை, ஆக.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பெரணமல்லூர் கிளை சார்பில் பொன்விழா துவக்க நிகழ்வு மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு களம் 25 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுகளுக்கு துணைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் கௌதம் முத்து வரவேற்றார். பள்ளி மாணவிகள் பேச்சு மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். சங்க மாவட்டத் தலைவர் முத்து வேலன் துவக்க உரை யாற்றினார். சங்க முன்னோடிகள் சேகரன், ெஜயராமன், பழனி, நடராஜன், கதிரவன், பாபு, சேகர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரனின் “நூலகம் இல்லா வீடு” துளிப்பா நூலை பூங்குயில் சிவக்குமார் வெளியிட தமிழ் ராசா பெற்றுக் கொண்டு உரையாற்றினார். பெரணமல்லூர் சேகரன் ஏற்புரை வழங்கினார். பொருளாளர் ப.தேவதாஸ் நன்றி கூறினார்.