கடலூர்,ஆக.9-
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நெய்தல் தமிழ் மன்றம் மற்றும் தாய்மொழி மன்றம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முதல்வர் பொறுப்பு ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் கீதா முன்னிலை வகித்தார். தமிழ் துறை உதவி பேராசிரியர் ராஜா வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் கீதா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அன்பரசி, ஜெர்மன் பல்கலைக்கழக பேராசிரியர் சுவேன் வாட்டர்மேன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். நெய்தல் தமிழ் மன்றம் அமைப்பாளர் அருணாச்சலம் நன்றி கூறினார்.