திருவண்ணாமலை,பிப்.3- திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமத்தில் ரூ.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ரவிச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜாபார் வரவேற்றார். தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.