கடலூர்,பிப்.4- கடலூர் மாவட்டம், வேப்பூரில் லட்சுமி மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழாவுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மரு. கருணாகரன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் மரு. ஜெயலட்சுமி வரவேற்றார். லட்சுமி பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி முதல்வர் தங்கராசு முன்னிலை வகித்தார். விழாவில், வேப்பூர் லட்சுமி மருத்துவமனையின் புதிய கிளையை, வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம் திறந்து வைத்தார். லட்சுமி மருத்துவமனையின் மருத்துவ மையத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பரிசோதனைகள் பிரிவை திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கந்தசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மருத்துவர் விஜயன், பேராசிரியர் குமணன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் கலைச் செல்வி, செவிலியர்கள் தேவி, தமிழரசி, முரளி, பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.