districts

img

சோழவரத்தில் காரல் மார்க்ஸ் நினைவு கல்வெட்டு திறப்பு

திருவள்ளூர், மே 5- மாமேதை கார்ல் மார்க்ஸ் 206-ம் ஆண்டு பிறந்தநாள் கல்வெட்டு திறப்பு விழா ஞாயிறன்று (மே 5), சோழவரத்தை அடுத்த அட்டப்பாளையம் கிராமத்தில் நடை பெற்றது. சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஞாயிறு ஊராட்சியில் உள்ள  அட்டப்பாளையம் கிராமத்தில் மாமேதை கார்ல் மார்க்ஸின் 206 ஆண்டு பிறந்த நாள் கல்வெட்டை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செய லாளர் எஸ்.கே.மகேந்திரன் திறந்து வைத்தார். செங்கொடியை  கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சிக்கு கிளை செய லாளர் ஜி.கருணாநிதி தலைமை தாங்கி னார். இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.சந்தானம், சோழவரம் ஒன்றிய செய லாளரும் ஞாயிறு ஊராட்சி மன்ற தலை வருமான ஜி.வி.எல்லையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.நடேசன், ஆர்.சித்ரா, விதொச மாவட்ட செயலாளர் அ.து. கோதண்டம்,  சிபிஎம் சோழவரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் இ.இரவி, டி.சரளா,சி.மனோ கரன், எம்.இரமணி ஆகியோர் பேசினர். மீஞ்சூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் ஒன்றிய செயலாளர் இ.ஜெய வேல் தலைமை தாங்கினார். இதில் தேவேந்திரன், டி.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரியபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட குழு உறுப்பினர் என்.கங்காதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மோசஸ்பிரபு கருத்துரை வழங்கியுள்ளார்.வட்டச் செய லாளர் ஏ.ஜி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூந்தமல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் பீர் முஹம்மது, தமுஎகச மாவட்ட செயலாளர் பாரி, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற கொடி யேற்று விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.