ஆரணி, அக். 27- ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட அரிகரன் நகரில் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்த மான காலி இடம் உள்ளது. அவரது இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க பன்னீர்செல்வம் ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி செல்போன் டவர் அமைப்பதற்காக அந்த இடத்தில் முட்புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் ஏற்கனவே ஒரு செல்போன் டவர் உள்ளதாகவும், அதன் மூலம் வீடுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென ஆரணி செய்யாறு நெடுஞ்சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாலுகா காவல் துறையினர் மறியக்லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக அங்கு செல்போன் டவர் அமைக்க தடை விதித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.