districts

img

பன்னீர்வாக்கத்தில் பொதுமக்கள் போராட்ட அறிவிப்பால் பட்டா கிடைத்தது

திருவள்ளூர், செப் 5- பன்னீர்வாக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கியதால்,  பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொன்னேரி அருகில் உள்ள ஆங்காடு ஊராட் சிக்கு உட்பட்ட பன்னீர் வாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேட்டைக்காரன் இன மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். இவர்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர் வாக்கம் கிராமத்தில் சர்வே எண் 1 ல் 57 பட்டாக்கள்  பல்வேறு போராட்டங் களுக்கு பிறகு வழங்கப் பட்டது. வழங்கப்பட்ட பட்டா வில் பெயர் உள்ளிட்ட பல்வேறு பிழைகள் உள்ள தால் அதனை சரிசெய்ய வேண்டும், விடுபட்ட 22 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலி யுறுத்தி செப்-3 அன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பொன்னேரி வட்டாட்சியர் மதியழகன் சங்கத்தின் தலைவர்களை செப் 2 அன்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது பிழைகளை  திருத்தம் செய்து 10 நபர் களுக்கு உடனடியாக பட்டாக்களை வழங்கினார்.  விடுபட்ட 22 குடும்பங் களுக்கு அடுத்த 15 நாட்க ளில் பட்டாக்கள் வழங்கப் படும் எனவும் வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தின் மாநிலச் பொதுச் செயலாளர் இ.கங்காதுரை,  மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாநில துணை செயலா ளர் ஏ.வி.சண்முகம்,  வேட்டைக்காரன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ராஜா, மாவட்ட தலைவர் டி.டில்லி, ஒன்றிய நிர்வாகி வெங்கட்டம்மா உட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.