காஞ்சிபுரம், ஆக 14 - முறையான சம்பள உயர்வு மற்றும் குறித்த தேதியில் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தூய்மை பணி, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தூய்மை பணிக்காக நிரந்தர ஊழியர்களும் மற்றும் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் என 600க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரு கின்றனர். இதில் 100 தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், மீதமுள்ள 400க்கும் மேற்பட்டோர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் 10 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஊதிய ஒப்பந்தத்தில் பணி புரிந்து வருகின்றனர். மேலும் இவர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலை யில் முறையான சம்பள உயர்வு அளிக்கப்படாமல் பல்வேறு காரணங்களை கூறி தனியார் ஒப்பந்த நிறுவனம் தவிர்த்து வந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மூன்றாவது மண்டலத்தில் பணிபுரியும் 53 பணியாளர்கள், பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு சம்பள உயர்வு முறையான தேதியில் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து அவர்கள் கோரிக்கைகளாக பல நிலைகளில் வைத்து நிறுவனம் முறையாக வழங்குவதில்லை என குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து அறிந்த மாநகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் அருள் நம்பி மற்றும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுடன் பேச்சு நடத்தி பணிகளை தொடங்குமாறு கேட்டு கொண்டனர். மேலும் இதுகுறித்து முறை யாக அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என தெரி வித்தனின் பேரில் அவர்கள் பணிகளை தொடங்கினர். தூய்மை பணியாளர்கள் கூறுகையில், குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தங்களின் குடும்ப வாழ்வாதாரம் சரிவர மேற்கொள்ள முடியும் எனவும் குழந்தைகளின் கல்வி, வீட்டு வாடகை என பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் பல ஆண்டு களாக ரூ.10500 மட்டுமே வழங்கி வரு வதாகவும் இதனை உயர்த்தி ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், மேலும் இதனை பெறுவதற்கு கூட கையூட்டும் அளிக்க வேண்டியுள்ளதாகவும் இதை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.