சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டின் தொழில் கேந்திர மாக விளங்கும் கோவை, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட் டங்களில் இயங்கி வரும் சிறு - குறு தொழில்களை பாதுகாத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று தமி ழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ள விபரம் பின்வருமாறு: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்லாயி ரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறு வனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவர்லூம் தொழில் உள்ளிட்ட ஜவுளி தொழில் களை மேற்கொள்ளும் நிறுவனங்க ளும் இயங்கி வருகின்றன. இந்தி யாவில் மோட்டார் பம்ப் உற்பத்தியில் 50 சதவிகிதம் உற்பத்தி கோவையில் செய்யப்படுகிறது.
இத்தகைய தொழில் நிறுவனங்களோடு காற் றாலை, ரைஸ்மில், தேங்காய் களம், கோழிப்பண்ணை, செங்கல் சூளை ஆகிய பல்வேறு தொழில்களும் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங் கள் லட்சக்கணக்கான தொழிலாளர்க ளுக்கு வேலை வாய்ப்பை அளிப்ப தோடு, அரசிற்கும் கோடிக்கணக்கான வரி வருவாயையும் அளித்து வருகி றது. குறிப்பாக, திருப்பூர் நகரம் பனி யன் தொழிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடை பெறும் தொழில் மையமாக உள்ளது. மொத்த இந்தியாவின் கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் 52 சதவிகித அளவிற்கு திருப்பூர் பங்களிப்பு செலுத்துகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழி லில் பணிபுரிகின்றனர். பெருமளவி லான கிராமப்புறப் பெண்களும் இந்நி றுவனங்களில் பணியாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பை செய்து வரும் இத்தகைய தொழில் நிறுவ னங்களின் தற்போதைய கோரிக்கை களை நிறைவேற்றவும், தொழில் மற் றும் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கவுமான வகையில், கீழ் கண்ட முக்கிய அம்சங்களை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதோடு, அவற்றை உரிய முறையில் நிறை வேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
1.தொழில் நிறுவனங்கள் தொடர்பான கோரிக்கைகள்
அ) சிறு, குறு தொழில்களுக்கு தற்போது அமலில் உள்ள பல் வேறு கடன் திட்டங்கள் முறையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். கொரோனா ஊரடங்கு போன்ற காலங் களில் ஏற்கனவே பெற்றுள்ள கடன் களை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதுடன் கடனுக்கான வட்டி தள்ளுபடி போன்ற வைகளையும் அறிவிக்க வேண்டும்.
ஆ) பனியன் தொழிலுக்கு விதிக் கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரி யினை பிரிவு வாரியாக விதிப்பதை தவிர்த்து தொழிலை பாதிக்காத வகை யில் வரிவிதிப்பு கொள்கை கையா ளப்பட வேண்டும். அவ்வப்போது ஏற்ற இறக்கமாக உள்ள நூல் விலை யேற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, விலைகளில் ஒரு நிலையான தன் மையை உருவாக்க வேண்டும். இதற் கென பிரத்யேகமாக சிசிஐ போன்று மாநில அளவிலான “தமிழ்நாடு பருத்தி வாரியம்” அமைக்கப்பட வேண்டும். பின்னலாடை துறைக்கு பிரத்தியேக ஆராய்ச்சி மற்றும் மேம் பாடு குறித்து ஒருங்கிணைந்த மத்திய பல்கலைகழகத்தின் விரிவு மையத்தை (CENTRAL UNIVERSITY EXTN CENTRE FOR MORDEN TEXTILE INDUSTRY) திருப்பூரில் உருவாக்க மாநில அரசு முயற்சித்து, ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
இ) திருப்பூர் சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் சாயப்பட் டறை கழிவுகளை அகற்றும் வகையில் மத்தியப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். தற்போது பொது சுத்திக ரிப்பு நிலையங்களுக்கு போடப்பட் டுள்ள 12 சதவிகித ஜி.எஸ்.டி.யை 5 சத விகதமாக குறைப்பதற்கான வகை யில் தமிழக அரசு முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்.
ஈ) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலூகா வணிகவரி மண்டலங்கள் ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள் ளது. இதனால் பல்வேறு இடர்பாடு கள் ஏற்படுகின்றன. எனவே, திருப் பூர் மாவட்டத்தை மையப்படுத்தி வணி கவரி மண்டலம் அமைப்பது பிரச்ச னைகளுக்கு உடனடி தீர்வு காண உதவியாக அமையும்.
உ) சிட்கோ, தாட்கோ தொழிற் பேட்டைகளில் தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு முன்னு ரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய் யப்பட வேண்டும். அந்த மையங்க ளில் உற்பத்தியாகும் பொருட்களை அரசே தேவையான அளவு கொள் முதல் செய்ய உரிய நிர்வாக ஏற்பாடு களை செய்திட வேண்டும் டிக் மூலம் புதிய படித்த வேலை தேடும் சுய தொழில் முனைவோருக்கு சலுகைக ளோடு கூடிய கடனுதவித் திட்டங்க ளையும் அமலாக்கிட வேண்டும்
ஊ) கோவை மற்றும் திருப் பூர் பகுதிகளில் அரசு மருத்துவமனை கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளதால், சிறு-குறு தொழில்கள் இயங்கி வரும் பகுதிகளை கண்டறிந்து தொழிற்சாலை வளாகங்களிலேயே தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டும் விதிகளை காரணத்தால் பல்வேறு இடங்க ளில் கடுமையான முறையில் அபரா தம் விதித்து, அச்சுறுத்தும் போக்கை கைவிடச் செய்து, அரசாங்கத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளை பின் பற்ற வலியுறுத்திட வேண்டும்.
2. தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகள்
அ) கோவையில் அரசு அமைத் துள்ள சுந்தராபுரம் சிப்காட் கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக உள்ளது. இதனை மேம்படுத்திட வேண்டும். அதேபோல், தொழில் அமைப்புகள் உருவாக்கியுள்ள தொழில் பேட்டைகளில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண் டும்.
ஆ) கோவை சிறு தொழில் உரிமையாளர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையே மூலப் பொருட்களின் மிகக் கூடுதலான விலை உயர்வு தொழிலை கடுமையா கப் பாதிக்கிறது. மூலப் பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இ) மின்சாரக் கட்டண விபரம் குறிப்பாக, கோவிட் காலத்திற்கு நிவா ரணம் வழங்கப்பட வேண்டும்.
ஈ) புலம் பெயர்ந்த தொழிலாளர் களை அரசு நிர்வாகத்திலும், வேலை வாங்குவோரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
உ) தொழிலாளர்களின் நலன் களை பாதுகாக்கும் வகை யில், அனைத்துப் பிரிவு தொழிலா ளர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான முறையில் சட்ட ரீதியான உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும். சமவேலைக்கு சமஊதி யம் வழங்கப்பட வேண்டும். தொழிலா ளர் நலத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நிர்ணயித் துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை அனைத்து துறை தொழிலாளர்க ளுக்கும் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
ஊ) புதிது, புதிதாக பல்வேறு நோய்கள் உருவாகிய வண்ணம் உள்ள நிலையில், தொழிலா ளர்கள் தங்கள் உழைப்பின் பெரும் பகுதி ஊதியத்தை மருத்துவத்திற்கே செலவழிக்க வேண்டிய கட்டாயத் திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ திட்டத் தில் இணைந்து பணம் செலுத்தி வரு கின்றனர். ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை இ.எஸ்.ஐ க்கு தொழிலா ளர்களின் பணம் செல்லும் நிலையில், தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் கூடுதலாக ஒரு இ.எஸ்.ஐ மருத்துவமனையை திருப்பூரில் கட் டித்தர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அத்தகைய ஒரு மருத்துவ மனை கட்டப்படுவதாக அறிவிப்பும் வெளியிட்டு, பிரதமர் அடிக்கல் நாட்டி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலை யில், மேலும் காலம் தாழ்த்தாமல் அனைத்துவிதமான உயர் அதிநவீன வசதிகளோடு கூடிய இ.எஸ்.ஐ. மருத் துவமனையை, கூடுதல் படுக்கைகள் வசதிகளோடு கட்டி தர வேண்டும்.
எ) இ.எஸ்.ஐ உயர் சிகிச்சைக் கான ஒப்புதல் பெற ஏற்கனவே மண் டல அலுவலகம் கோவையில் இருந்தபோது திருப்பூரிலிருந்து செல்வது உதவியாக இருந்தது. தற் போது தமிழகத்தில் 7 மண்டலமாக இ.எஸ்.ஐ. பிரிக்கப்பட்டு சேலம் மண்டலத்தில் திருப்பூர் இணைக்கப் பட்டது பொருத்தமற்றது. திருப்பூ ரில் மட்டும் 5 லட்சம் பேர் இ.எஸ்.ஐ. யில் உள்ள போது, திருப்பூரை தலை மையிடமாகக் கொண்டு மண்டல மைய அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.
ஏ) புலம் பெயர்ந்து வேலை தேடி வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான அடையாள அட்டை, உரிய சம்பளம், பாதுகாப்பான தங்கு மிடம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். 1976ல் இதற்காக கொண்டுவரப்பட்ட புலம் பெயர்ந்தோ ருக்கான சட்டத்தை அமல்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஐ) திறன் வாய்ந்த தொழிலா ளர்கள் அதிகத் தேவையுள்ள கோவை மற்றும் திருப்பூரில் தொழில் சார்ந்த பயிற்சி நிலையங்கள், திருப் பூரில் அரசு பொறியியல் கல்லூரி, ஆயத்த ஆடை ஆராய்ச்சி அமைப்பு, தொழில் சார்ந்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள் என பிரத் யேக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தொழில் நுட் பம் சார்ந்து உயர் கல்வி நிறுவனங் கள் உருவாக்கப்பட வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களை கணக் கில் கொண்டு நிரந்த விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், குழந் தைகளுக்கான விளையாட்டு மையங் கள் உருவாக்கிட அரசு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும்.
ஒ) தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வேகமான நகர மயமாக்கலால் கோவை மற்றும் திருப் பூரில் தொழிலாளர்களுக்கான வசிப் பிடம் என்பது மிகப்பெரும் பிரச்ச னையாக வளர்ந்து வருகிறது. எனவே, தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான தேவை களை நிறைவேற்றும் வகையில் தொழிலாளர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டுதல், உழைக்கும் மகளிர் விடுதிகளை தேவைக்கேற்ற அளவில் அரசே உரு வாக்க வேண்டும்.
3. கட்டமைப்பு மேம்பாடு கோரிக்கைகள்
அ) தொழில் நிறுவனங்கள் நிறைந்துள்ள இப்பகுதிகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், மக்களும் பெரும் பாலும் பொதுபோக்குவரத்தை பயன் படுத்தி வரும் நிலையில், அதற்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண் டும். குறிப்பாக, கோவையிலிருந்து திருப்பூருக்கும், மேட்டுப்பாளையத் திற்கும், பொள்ளாச்சிக்கும் இடையே யான வழித்தடங்களில் கூடுதலான ரயில்களை இயக்குவது அவசியம். எனவே ஒன்றிய அரசிடம் இக்கோரிக் கையை தமிழக அரசு வலியுறுத்தி பெற வேண்டும்.
ஆ) சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற் படாத வகையில் சுகாதார கட்ட மைப்பை பலப்படுத்துதல், குடிநீர் தேவைகளை முழுமையாக நிறை வேற்றுதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு தேவைகளையும் முழுமையாக மேம் படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்குறிப்பிட்டுள்ள கோரிக்கை களை தமிழ்நாடு அரசு, உரிய முறை யில் பரிசீலிப்பதோடு, கோரிக்கை களை நிறைவேற்றும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் விரைந்து எடுத்திட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.