districts

img

குடிமைப் பணி பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு

சென்னை, பிப். 27- மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு தமிழக அரசின் சார்பில்  கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கட்டணமில்லா இந்த பயிற்சி கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லா பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு ஞாயிறன்று (பிப். 27) தமிழகத்திலுள்ள 18 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வில், கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காக கூடுதலாக 30 நிமிட நேரம் வழங்கப்பட்டு, மொத்தத் தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, நேரில் சென்று பார்வையிட்டார். உடன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அலுவலர்களும் இருந்தனர்.