districts

சட்டவிரோத மதுக்கூடங்களை மூட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, நவ. 5 - சட்டவிரோதமாக செயல்படும் டாஸ்மாக் மதுக்கூடங்களை (பார்) மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: மக்களை மதுவுக்கு அடிமையாக்கு வதை எதிர்த்து, எதிர்கட்சியாக இருந்த போது திமுகவும் போராடி யது. சட்டமன்றத் தேர்தலில், ஆட்சி  பொறுப்பேற்று டாஸ்மாக் கடைகளை யும், விற்பனை நேரத்தையும் குறைப் போம் என்று வாக்குறுதி அளித்தது.  இதற்குமாறாக அரசின் நடவடிக்கை கள் உள்ளன. தமிழகத்தில் 5380 மதுபான சில்லரை  விற்பனை கடைகளும், அவற்றுடன் இணைந்த 3240 மதுக்கூடங்களும் உள்ளன. சில்லரை விற்பனை கடை களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்க அனு மதிக்கப்படுகிறது. அதேகால அளவில்தான் மதுக்கூடங்களும் செயல்பட வேண்டும். மாறாக, கள்ள  சந்தையில் கூடுதல் விலைக்கு 24 மணி  நேரமும், வருடத்தின் அனைத்து நாட்க ளிலும் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

காவல்துறையின் ஒத்துழைப்பு இன்றி இந்த விற்பனை நடைபெறவும், மது பான கூடங்கள் இயங்கவும் முடியாது. சென்னை போன்ற பெருநகரங்க ளில் பெரும்பாலும் அரசு விதிமுறை களுக்கு மாறாக, பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகளில்தான் சில்லரை விற்பனை கடைகள் அமைந்துள்ளன. இந்த சட்ட விரோத மதுவிற்பனை, மதுக்கூடங்களின் செயல்பாடுகளால் பள்ளி குழந்தைகளும், வழிபாட்டு தலங்களுக்கு செல்வோரும் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்; சட்டம் ஒழுங்கும் சீர்கெடுகிறது.   குறிப்பாக, எம்ஜிஆர் நகர், ஆர்-10  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பச்சையப்பன் தெருவில் மதுக்கூடத்துடன் கூடிய கடை (எண் 664), பிள்ளையார் கோவில் தெரு,  விஜயா தியேட்டர் அருகே உள்ள கடை (எண் 660), 15வது அவென்யு பிஎஸ்என்எல் நிறுவனம் பாரதி சாலையில் உள்ள கடை (எண் 931), டாக்டர் காணுநகர் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள கடை (எண் 735) ஆகிய வற்றில் தங்கு தடையின்றி இரவும், பகலும் மதுபானம் விற்கப்படுகிறது. ஆகவே, சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்போர், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மாறாக விற்பனை செய்வோர், சட்டவிரோத மதுக்கூடங்களை நடத்துவோர், அதற்கு துணை போவோர் மீது அரசு  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேர்தல் வாக்குறுதிபடி கடைகளை யும், விற்பனை நேரத்தையும் குறைக்க  வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங் களை மூட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.