சென்னை,ஆக. 23-
இந்தியாவில் பால் பண்ணைப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் அதன் 200-வது ஐபாகோ ஐஸ்க்ரீம் ஸ்டோரை தெலங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் பிரகதி நகரில் தொடங்கியுள்ளது..
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஹட்சன் அக்ரோ புராடக்ட் நிறுவனத்தின் தலைவர் ஆர்ஜி. சந்திரமோகன், புதுமையான, தனித்துவமான சுவைகளில் ஐஸ்க்ரீம் தயாரிப்புகளை வழங்கியதால் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம் என்றார். வழக்கத்திலிருந்து மாறுபட்ட வித்தியாசமான சிந்தனைகளும், பிற நிறுவனங்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக்காட்டியதும் இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.