கள்ளக்குறிச்சி, ஏப்.30 – சுட்டெரிக்கும் வெயிலில் உளுந்தூர்பேட்டை ஆத்தூரில் மண்பானை விற்பனை சூடுபிடித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆத்தூர் கிராமம். இங்கு கடந்த பத்து தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது. பானைகள் செய்வதற்கு களிமண் மூலப்பொருளாக இருந்தா லும் பானைகள் விற்பதற்கு வெயி லேயே மூலாதாரமாக இருக்கிறது எனலாம். களிமண்ணால் செய்யப்பட்ட பானையில் சமையல் செய்யும் போது பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவும், இதனால் உண வில் உள்ள சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கும். இதுவே உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம் என்று பாட்டிகள் ்கூறுகிறார்கள். மண்பாண்டங்களில் நிறைந்துள்ள ஆல்கலைன்கன் அமிலத்தன்மை உடலின் பிஎச் தன்மையை சமன் செய்கிறது என அறிவியலாளர்களும் தெரி விக்கின்றனர். இந்த ஆண்டு சுட்டெரிக்கும் கோடை வெயில்ஒருபுறம் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் கூல்டிரிங்ஸ், ஐஸ்வாட்டர் என நவீனத்தை மக்கள் நாடினாலும் பழமையான முறையில் இயற்கை யான குளிர்ந்த குடிநீர் கொடுக்கும் பானை தண்ணீர் குடிப்பதன் நன்மை கருதி மக்கள் மண்பானை யின் பக்கம் திரும்பத் தொடங்கி யுள்ளனர், கேசவேல் என்ற மட்பாண்ட தொழிலாளி தனது இரண்டு குழந்தை களுடன் ஒரு மாட்டு வண்டியில் நூற்றுக்கும் அதிகமான மண்பானை களை ஏற்றிக்கொண்டு வந்து நகரப் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட் மளிகைக் கடைகளில் பானைகளை இறக்கிக் கொண்டிருந்தார் அவர் கூறுகையில், இந்த ஆண்டு மண்பானை வியாபாரம் கடந்த ஆண்டு காட்டிலும் அதிக இருப்ப தற்கு வெயிலே சாட்சி. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான மக்கள் பானை தண்ணீர் குடிக்க விரும்பி மண் பானையினை வாங்கிச் செல்கின்ற னர். மாவட்டத்தில் முக்கிய நகரங் களில் வாரச்சந்தைகளில் பானை விற்பனை செய்கிறோம். மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீடு வீடாகவும் விற்பனை செய்கிறோம். இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. சீசன் இல்லாத சமயங்களில் மாதா மாதம் சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய மளிகை கடை களுக்கு பலவகையான மண்பானை களை மொத்தமாக தருகிறோம். சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு மண்பானைகள் அவசியம் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களுக்கும் இறப்பு காரியம் போன்ற துக்க நிகழ்ச்சிகளுக்கும் தேவை யான அனைத்து ரக பானை வகைகளையும் நாங்கள் கடைகளில் விற்பனைக்கு தருகிறோம். இந்த ஆண்டு மண்பானை விற்பனை போதிய வருமானம் கிடைப்பதுடன் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். - ஜெ.சசிக்குமார்