districts

img

தரமான உணவு வழங்க கோரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, டிச.29- திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகி றது .இந்த விடுதியில் வழங்க ப்படும் உணவு தரமானதாக இல்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  ஆனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர் கள்எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விடுதி மாணவர்கள் , தங்க ளுக்கு தரமான உணவு வழங்கப்படாததை கணடித் தும், தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியு றுத்தியும் திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் இன்று காலை  திடீர் சாலை  மறியல் போராட்டம் நடத்தி னர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது .இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத் திற்கு போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் விடுதி யில் தங்கி இருக்கும் மாண வர்களுக்குத தரமானஉணவு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உதவி புரிவதாக தெரிவித்தனர். அதனை ஏற்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.