ராணிப்பேட்டை, நவ. 28 – ராணிப்பேட்டை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆற்காடு மேம்பாலம் (ராஜேஸ்வரி திரையரங்கம்) முதல் கிருஷ்ணகிரி டிரங்க் ரோடு, காந்தி ரோடு, ஆர்.ஆர் ரோடு, கெல்லீஸ் ரோடு, எம்.பி.டி.ரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் 84 உயர்கோபுர மின்கம்பங்களுடன் 168 எண்ணிக்கையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் புதனன்று (நவ. 27) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீம. ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் ப்ரீத்தி, தனியார் நிறுவன அதிகாரிகள் பார்த்திபன், ஆதித்யன், சீனிவாசன், சரவணன், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.