districts

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமை ஆசிரியரை கைது செய்ய மலைவாழ்மக்கள் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், நவ 18- பள்ளிப்பட்டில் சிறுமியை பாலியல் ரீதி யாக துன்புறுத்திய தலைமை ஆசிரியரை கைது செய்து தமிழ்நாடு அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் (வயது 59), என்பவர் பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் இருளர் என சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியை தலைமை ஆசிரியர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப  தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த புகாரை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சம்பவத்தன்று தலைமையாசிரியர் மாண வர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்ட நிலையில், தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் யாரும் இல்லாத இடத்திற்கு மாணவியை அழைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்து விட்டதாக சிறுமி பேசும்  வீடியோ வைரலாகி வருகிறது. தலைமை ஆசிரியரை  கைது செய்ய கோரிக்கை இருளர் இன சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது அபூர்வமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு தடைகளை மீது இருளர் இன குழந்தைகள் கல்வி கற்க செல்லும் நிலையில், தலைமை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவரே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர் செங்கல்வராயனை உடனடியாக கைது செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்து படிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், இருளர் இனத்தை சேர்ந்த வர்கள் குடும்பம், குடும்பமாக ஊரை விட்டே வெளியேறி வருகின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து அம்மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நட வடிக்கை எடுக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, செயலாளர் ஆர்.தமிழ்அரசு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.