திருவள்ளூர்,ஜன.8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வழுதலம்பேடு கிளை செயலாளரும், கட்டுமான சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்டத் தலைவருமான தோழர் இ.குமார் (வயது 44), காலமானார். ஞாயிறன்று மாலை காரனோடை மேம்பாலம் அருகில் விபத்தில் மரணம் அடைந்தார். 44 வயதே ஆன அவர் கட்சி மற்றும் கட்டுமான சங்கத்தின் வளர்ச்சிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணி ஆற்றியவர் .கும்மிடிப்பூண்டி பகுதியில் முதல் கட்சி கிளை ராகவரெட்டிமேட்டில் தொடங்கியது. தோழர் சி.ஆறுமுகம் மற்றும் மறைந்த தோழர் ஆர்.ஏ.மாரிமுத்து போன்ற தோழர்கள் கட்சியில் இணைந்து பிறகு கிராமப்புற பகுதிகளில் கட்சியை வளர்த்தெடுத்தனர். அதில் ஒரு கிளை தான் சின்ன வழுதலம்பேடு. கட்சி மற்றும் கட்டுமான சங்கத்தின் பகுதி, மாவட்ட ,மாநில அளவிலான நடைபெறும் பல்வேறு இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கேற்பார். விலைவாசி உயர்வு, வேலையின்மையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர். மறைந்த குமாரின் உடலுக்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ப.சுந்தரராசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், பி.துளசிநாராயணன், கே.விஜயன், ஜி.சம்பத், கே.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.சூரியபிரகாஷ், ரவி, நடேசன், கதிர்வேல், தவமணி, சேகர், கீதா, கட்சியின் வட்டக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், லோகநாதன், ரவிக்குமார், சீனு, சிவக்குமார், ஜோசப், கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.நாகராஜன், செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர், பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன் உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். தோழர் குமாருக்கு மீனாட்சி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான வழுதலம்பேடு மயானத்தில் திங்களன்று (ஜன 8) அடக்கம் செய்யப்பட்டது.