districts

img

போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான்

ராணிப்பேட்டை, ஆக. 18 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தடகள கிளப் மற்றும் குத்துச் சண்டை கிளப் ஆகியவை இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு, மாசுக்கட்டுப்பாடு, பசுமை இந்தியாவை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் ஞாயிறன்று (ஆக. 18)  மாரத்தான் நடத்தியது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஜி. ரகு, ராணிப்பேட்டை மாவட்ட தடகள சங்கச் செயலாளர் ஆ. ஜான்சன், ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபு, கிஷோர், ஒழலை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம், தமிழ்நாடு காவல்துறை வெங்கடேசன், சங்கர், இந்தியன் வங்கி அலுவலர் நக்கீரன், உடற்கல்வி ஆசிரியர்கள் லோகநாதன், சுரேஷ் கலந்து கொண்டனர்.