districts

சென்னை முக்கிய செய்திகள்

ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் எச்சரிக்கை  

சென்னை, பிப். 23- அதிக கட்டணம் வசூ லிக்கும் ஆம்னி பேருந்து களின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நட வடிக்கைகளை எடுக்கு மாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனி யார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்ப தாகவும், அதிக கட்டணம் வசூல் தொடர்பாக அடிக்கடி சோதனைகள் நடத்தி சம்பந்தப்பட்ட நிறு வனங்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்க வகை செய்யும் அரசாணை அமல் படுத்தும்படி அனைத்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தர விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிம் இவ்வாறு கூறியது.

அடையாறு நதியை மீட்டெடுக்கும் திட்டம்
வரதராஜபுரம் நல மன்ற கூட்டமைப்பு வரவேற்பு!

சென்னை,பிப்.23- அடையாறு ஆற்றை பாதுகாக்க இரு கரைகளிலும் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைப்பது மற்றும் பூங்காக்கள் அமைத்து பராமரிப்பது என்ற தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதற்கு வரதராஜ புரம் நலமன்ற கூட்டமைப்பு  வரவேற்றுள்ளது. தமிழக அரசு  சட்டப்பேரவையில் அண்மையில் (பிப்.19) சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் அடையாறு  நதியை மீட்டெடுத்து அழகுற  சீரமைக்கும் திட்டம் மேற்கொள்ளப் படும் என்றும் அடையாறு ஆற்றின்  இரு கரைகளிலிலும் 70 கிமீ   தூரத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து கழிவுநீர் வெளி யேறுவதற்கு ஏற்ற மாற்று வழி களை அமைப்பது என்றும், நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது என்றும், ஆற்றின் கரையில் மக்களின் மனம் கவரும் வகையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வரதராஜபுரம் நலமன்ற கூட்ட மைப்பு சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக  அடையாறு ஆற்றை பாதுகாக்க வேண்டும், அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க  வேண்டும், அடையாறு ஆற்றினை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளி லிருந்து வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறைக்கும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு நிர்வாகத்திற்கும், தமிழக  அரசிற்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. மேலும், இதுகுறித்து கருத்தரங்கம் ஒன்றும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோரிக்கை வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள  குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க வரதராஜபுரம் பகுதியில் ஆற்றின் இரு கரைகளி லும் தலா ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க வேண்டு மென்றும், அதேபோல் அமைக்கப்பட உள்ள பூங்காவில் ஒரு பூங்காவை வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்க வேண்டுமெனவும், வரக்கூடிய காலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாவண்ணம் வெள்ள தடுப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனவும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  வரதராஜபுரம் நலமன்ற கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் வெ.ராஜ சேகரன்,  பொதுச்செயலாளர் டி.சந்தா  கிருஷ்ணன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒழுங்கீனம்: காவலர் பணி நீக்கம்

ஒழுங்கீனம்: காவலர் பணி நீக்கம் சென்னை, பிப். 23- பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக செம்பியம் காவல்  நிலைய தலைமைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.  சென்னை செம்பியம் காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் எம்.செந்தில்குமார். இவர் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.  குறிப்பாக செந்தில்குமார், குமரன் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பணிபுரியும்போது, காவல்துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியோ, முன்னறிவிப்போ செய்யாமல் விடுமுறை எடுத்துள்ளார்.  அதே ஆண்டு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஒரு  பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவு சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் மேற்கு சைதாப்பேட்டை யில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த செந்தில்குமார், அதே பகுதியைச் சேர்ந்த  மற்றொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். செந்தில்குமார் மீது தொடர்ச்சியாக வந்த புகார்கள் குறித்து சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள், விசாரணை செய்தனர். விசாரணையில் செந்தில்குமார் மீதான  குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன், தலைமைக் காவலர் செந்தில்குமாரை பணி நீக்கம் செய்து வெள்ளிக் கிழமை உத்தரவிட்டார்.

நூற்புழுக்களிடமிருந்து  பயிர்களை பாதுகாக்கும் மருந்து

சென்னை, பிப்.23-  பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பில்  முன்னணி நிறுவனமான கோர்டேவா அக்ரிசயின்ஸ் நிறுவனம்  இந்தியா வில் சாலிப்ரோ என்னும் நூற்புழுக் கொல்லி மருந்தை அறிமுகம் செய்துள்ளது. தாவர-ஒட்டுண்ணி நூற்புழுக்கள் என்பது மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்களாகும், அவை தோட்டக்கலை பயிர்களான குடைமிளகாய், வெள்ளரி, தக்காளி மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றின் வேர்களை உண்ணுகின்றன. இந்த நூற்புழுக்களைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. அவை பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் லாபத்தையும் பாதிக்கின்றன. அந்த வகை யில் விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக கோர்டேவா அக்ரிசயின்ஸ் நிறுவனம் சாலிப்ரோ என்னும் புதிய பூச்சிக்கொல்லி மருந்தை அறிமுகம் செய்துள்ளது. இது  மண்ணின் வளம் மற்றும் மண்ணில் வாழும் பூச்சிகள்  மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் அதேவேளை யில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தா மல் நூற்புழுக்களை மட்டும் திறம்பட அழிக்கிறது என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

திருப்பதி, மைசூர் ரயில்கள் ரத்து

சென்னை,பிப்.23- திருப்பதியிலிருந்து நாள்தோறும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல்  வருகை தரும் விரைவு ரயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும்  காவேரி ரயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய  தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு  செல்லும் காவேரி விரைவு ரயில் (16021) வரும் 26, 27 மற்றும்  மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கீழ்சேவூரில் அடிப்படை வசதிகளை செய்து தர வாலிபர் சங்கம்  கோரிக்கை

விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்டம், கீழ் சேவூர் கிராமத்தில் அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கீழ்சேவூர் கிளை சார்பில் கிளைத் தலைவர் ஏ.குகன், கிளைச் செயலாளர் எஸ்.சிலம்பரசன் ஆகி யோர் தலைமையில் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்சேவூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்தி வரும்  நிழற்குடையை மக்கள் பயன்படுத் தும் வகையில் கட்டித்தர வேண்டும். காட்சி பொருளாக இருக்கும் மகளிர் கழிவறை கிராம சமுதாயக்கூடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.