districts

img

மினி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

சென்னை, ஆக. 25 -

       மினி பேருந்தை மீண்டும் இயக்க கோரி வெள்ளியன்று (ஆக.25) மூவரசம்பட்டில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    கீழ்க்கட்டளையிலிருந்து திரி சூலம், மூவரசம்பட்டு, ரத்தினபுரம், பர்மா தமிழர் காலனி, ஜிஎஸ்டி சாலை வழியாக பல்லாவரம் வரை எஸ்.11 மினி பேருந்து இயக்கப்பட்டு வந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

     மூவரசம்பட்டு பிரதான சாலையில் ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி அலுவலகம், வழிபாட்டு தலங்கள் இயங்கி வருகின்றன. திரி சூலம் குவாரிகளிலிருந்து மூவ ரசம்பட்டு பிரதான சாலை வழியாக நூற்றுக்கணக்கான கனரக வாக னங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சாலையில் புழுதி ஏற்படுவ தோடு, அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்கின்றன.

    இந்த நிலையில், எஸ் 11 மினி பேருந்தை மூவரசம்பட்டிலிருந்து பல்லாவரம் வரை மீண்டும் இயக்க வேண்டும், மூவரசம்பட்டு பிரதான சாலையில் காலை 8.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரி  கிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செய லாளர் ந.வெங்கடேசன், பகுதிக்குழு உறுப்பினர் மோகன்ஜி, கிளைச்செயலாளர்கள் கே.முரளி, ஜெ.ஜான்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   இதனைத் தொடர்ந்து மூவரசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.கே.ரவி (எ) விவேகானந்தனிடம், ஜி.ராம கிருஷ்ணன் மனு அளித்து பேசினார்.