districts

காவலர்களுக்கு தக்கை தொப்பி!

பூந்தமல்லி,மார்ச் 26- சென்னை வேலப் பன்சாவடியில் போக்கு வரத்து காவலர்களுக்கு வெயில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (மார்ச் 26) நடைபெற்றது.  ஆவடி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு தக்கை தொப்பி, கூலிங் கிளாஸ், குளிர் பானங்களை வழங்கி னார். முன்னதாக திரு வேற்காடு நகராட்சி அலு வலகம் அருகே போதை  பொருள் தடுப்பு விழிப் புணர்வு மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு ஓட்டத்தை ஆணையர்  தொடங்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.