சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் விசைத்தறிகளின் மின்சார சலுகை ரத்து செய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பாக கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், நிர்வாகிகள் தயாளன், கந்தசாமி, முருகவேல், எம்.ராஜேந்திரன், குமார், அரங்கநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.