districts

img

ரயில்வே மேம்பாலத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மறைமலைநகர், நவ.18-  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட சாமியார் கேட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன.  இதில் 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்று திறனாளிகள் வசித்து வருகின்றனர்.இவர்கள் அருகில் உள்ள மறைமலைநகர் ரயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள மறைமலைநகர் ஆப்பூர் சாலையில் உள்ள ரயில்வே கடவுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக,இந்த பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட வீடு களை காலி செய்ய கோரி அரசு தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் பேரமனூர் கிராம நலச் சங்கம் சார்பில் சாமியார் கேட் அருகில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.தாட்சாயணி தலைமையில் ஜிஎஸ்டி, சாலையோரம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் கூறியதாவது, 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். அனை வரும் கூலி தொழில் செய்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இங்கி ருந்து அகற்றப்பட்டால் வாழ்வாதாரம் பாதிப்படையும் இப்பகுதி மக்கள் பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் அகற்றப்பட்டால் அவர்களுக்கு மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் அருகில் காலியாக உள்ள இடத்தில் தலா 3 சென்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர். கோரிக்கைகளை விளக்கி மறைமலை நகர் துணைத்தலைவர் வழக்கறிஞர் எம். பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் எம்.வள்ளிக்கண்ணன், துணைத் தலைவர் கே.லிங்கன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சண்முகம், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ஜெயந்தி, விசிக மாவட்ட செயலாளர் தென்னவன், மறைமலைநகர் முன்னாள் நகர மன்ற தலைவர் கோபி கண்ணன் உள்ளிட்ட பலர்  பேசினர்.  போராட்டத்தை நிறைவு செய்து  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  மாநிலத் தலைவர் டி. வில்சன்  உரையாற்றினார்.