districts

img

இந்து ஆதிதிராவிட மக்களுக்கு குடி மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனு

திட்டக்குடி வட்டம் ராமநத்தம் ஊராட்சி காந்தி நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து ஆதிதிராவிட மக்களுக்கு குடி மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன் தலைமையில் சார் ஆட்சியரிடம் செவ்வாயன்று (ஜூலை 27) மனு அளித்தனர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சிவஞானம், வட்டச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர் ஆர்.மகாலிங்கம், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், காந்தி நகர் கிளை செயலாளர் மாயவன் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

;