districts

img

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்

சென்னை, செப். 24 காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத்தின் சென்னை  கோட்டம் 2 மாநாடு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை (செப். 23, 24)  வேப்பேரியில் நடை பெற்றது. சங்கக் கொடியை தலை வர் கே.மனோகரன் ஏற்றி  வைத்து பொது மாநாட்டிற்கு  தலைமை தாங்கினார்.  அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் பி.பி.கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். சென்னை கோட்டம் 2இன் முதுநிலை பிரிவு மேலாளர் ஜி.குமார் முதல்  நிலை அதிகாரிகள் சங்கத் தின் தலைவர் உண்ணா மலை, இந்திய இன்சூரன்ஸ் களப்பணியாளர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.எம்.ஷெரிப், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கோட்டம் 2இன்  பொதுச்செயலாளர் டி.கே.வெங்கடேசன், சென்னை கோட்டம் 1இன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், ஆனந்தன் (ஜெனரல் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

இணைச்செயலாளர் பி.எம்.ரமேஷ் நன்றி கூறினார். பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டை தென் மண்டல இன்சூரன்ஸ்  ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆர்.தர் மலிங்கம் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா ஆண்ட றிக்கையையும்,  பொருளா ளர் பி.எம்.ரமேஷ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் பொரு ளாளர் எஸ் சிவசுப்பிர மணியம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இதில் தென்மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர்  கூட்டமைப்பின் முன்னாள்  பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், நிர்வாகிகள் ஆர்.கே.கோ பிநாத், வி.ஜானகிராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஆயுள் காப் பீட்டு பிரீமியம் மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி  வரியை நீக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.ஆர்.கிரண்குமார் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தலைவராக கே.மனோ கரன், பொதுச் செயலாள ராக ஆர்.சர்வமங்களா,  பொருளாளராக பி.எம்.ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.