சென்னை, செப்.11- இந்தியாவின் பிரமாண்ட ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (CIT) ரூ.5 கோடி செலவில் இம்மையத்தை துவங்கியுள்ளது. இந்த தொழில் நுட்ப சாதனம் 1000 பேர் செய்யக்கூடிய வேலையை சில மணி நேரத்தில் செய்யக்கூடிய நவீன சாதனம் ஆகும். கார் தொழிற்சாலைகள், மருத்துவத்துறை , எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல வேலைகளை எளிதாக கையாளக்கூடிய அளவில் இந்த தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்துள்ளது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை குகா (KUKA) மையத்தின் முதன்மை மண்டல அதிகாரி ஆலன் ஃபேம், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம் ஆகியோர் தொடக்கி வைத்தனர். சிஐடி கல்லூரி தலைவர் பார்த்தசாரதி ஸ்ரீராம்,குகா நிறுவனத்தின் மேலாளர் ராகவன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோபோடிக் பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் லேர்னிங் சென்டர், தமிழக அரசு தமிழ்நாட்டில் நிறைய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வெளிநாடுகளில் இருந்து அழைத்து வர உள்ளதாகவும் வருங்காலத்தில் ரோபோடிக் பொறியாளர்கள் அதிகளவில் உருவாக்க உள்ளதாகவும் கூறினர். மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ளும் வகையில் குறைந்த கட்டணத்தில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினர்.