சென்னை, ஜன. 8 - நூலகங்களுக்கு நூல்களை கொள்முதல் செய்து அரசு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார். எழுத்தாளர் ஓ.கே.ஜானி எழுதி, நெய்வேலி மு.சுப்பிரமணி மொழி பெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பி த்துள்ள ‘காவேரியுடன் எனது பயணங் கள்’ நூல் வெளியீட்டு விழா புதனன்று (ஜன.8) சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்றது. ஏசியன் ஊடகவியல் கல்லூரி தலை வர் சசிக்குமார் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் நூலின் முதல் பிரதியை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார். மேலும் திருநர்ஆ.ரேவதி எழுதிய ‘அரங்கேறிய வெள்ளை மொழி’, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா எழுதிய ‘ஒளிரும் டங்ஸ்டன், இருளும் எதிர்காலம்’ ஆகிய நூலைகளை பெ.சண்முகம் வெளியிட, பத்திரிகையாளர் கவிதா முரளிதர னும், பேரா.வீ.அரசுவும் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர் களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: சென்னை புத்தகக் காட்சி மக்கள் வரவேற்புடன், பண்பாட்டு நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சிகள் வாயிலாக நூலக வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வரியை பயன்படுத்தி நூல்களை கொள்முதல் செய்து நூலகங்களுக்கு அனுப்புவது பல்லாண்டுகளாக நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் நூல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தும் நூல் கொள்முதல் செய்யா மல் இருப்பது சரியல்ல. இதன் காரணமாக பதிப்பாளர் களும், எழுத்தாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் நிதி இல்லை என்று கூற முடி யாது. பட்ஜெட்டில் இதற்கென்று தனி யாக நிதி ஒதுக்கத் தேவையில்லை. எனவே, முதலமைச்சர் தலையிட்டு, மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரியை பயன்படுத்தி நூல்களை கொள் முதல் செய்து நூலகங்களுக்கு வழங்க முன்வர வேண்டும். டங்ஸ்டன் வழக்குகளுக்கு கண்டனம் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட மன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றியது. அரசின் இந்த முயற்சியை வரவேற்றுள்ளோம். இந்த தீர்மானத் திற்கு வலுசேர்க்கும் வகையிலும், ஒன்றிய அரசு அந்த ஏலத்தை முழுமை யாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜன.7 அன்று மேலூர் வட்டார மக்கள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை நடத்தியது குற்றம் என்று தமிழ்நாடு காவல்துறை 5 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிந்துள்ளது கண்டத்திற்குரியது. மக்கள் தங்களுடைய குறைகளை எப்படி வெளிப்படுத்த முடியும், மனு மட்டும் கொடுத்தால் போதும் என்று தமிழ்நாடு அரசு நினைக்கிறதா, எனவே வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், “சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டற கலந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் போராட் டத்தில் கலந்து நிற்கிறார். சிபிஎம் ஊழி யர்கள் போராட்டத்தில்தான் உள்ள னர். அடுத்தடுத்து அந்தப் போராட்டத் தில் மாநிலத் தலைவர்கள் பங்கேற் பார்கள். டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது என்று ஒன்றிய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். போராடு கிற சக்திகளோடு இணைந்து நிற்போம்” என்றார்.