புதுச்சேரி,ஜன.24- புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. புதுச்சேரி அரசு, பள்ளி கல்வி இயக்க கத்தின் மூலம் புதுச்சேரி அரசுப்பள்ளிகளில் 2023-24 கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (ஜன.24) நடை பெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது பேசிய முதல மைச்சர்,“ மாணவர்கள் மகிழ்ச்சியோடு இருந்தால் தான் சிரமமின்றி படிக்க முடியும். பட்ஜெட்டில் அறிவித்து இரண்டு ஆண்டு களுக்கு பிறகு இத்திட்டம் அமலானபோதே, இதை செயல்படுத்துவதில் உள்ள சிரமம் தெரியும். இத்திட்டத்தை எப்படி செயல் படுத்துவது என நினைத்துக் கொண்டி ருந்தேன். அது தற்போது நிறைவேறி யுள்ளது”என்றார். முதற்கட்டமாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கதிர்காமம், இந்தி ராகாந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்திரா நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்தரையர் பாளையம் ஆகிய பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.68 கோடி செலவில் மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.