districts

img

அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

வேலூர், டிச.2– அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்க  வேலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 14வது மாவட்ட  மாநாடு வேலூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ட்.டி.ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜீவநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். எம்.எஸ்.தீனதயாளன் வர வேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் (பொ) பா. வேலு, அறிக்கையை சமர்ப்பித்தார். பொரு ளாளர் சு.சுமதி நிதிநிலை அறிக்கையை வாசித்தார், அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ரவி, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு துணை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பர  சுராமன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் (பொ) ச.டேனியல் ஜெய்சிங் நிறை உரையாற்றினார். புதிய நிர்வாகிகள் மாவட்ட தலைவராக ட்.டி.ஜோஷி, செயலாளராக எம்.எஸ்.தீனதயாளன், பொருளாளராக சு.சுமதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும். வேலூர் மாநகராட்சியில் வசிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு வட்டங்களுக்கு சார்நிலை கருவூலம் மற்றும் சார்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.