செங்கல்பட்டு, நவ.18- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செங்கல்பட்டு மாவட்டம் மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 2வது மாநாடு மாவட்டத் தலைவர் கே.பூங்குழலி தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக் குழு தலைவர் எம்.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் எம்.தாமோதரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகி இ.சங்கர தாஸ் பேசினார். மாவட்டச் செயலாளர் சா.முகமது உசேன் வேலை அறிக்கையும் மாவட்ட பொருளாளர் வே.விக்டர் சுரேஷ் குமார் வரவு - செலவு அறிக்கையும் சமர்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.கலைச்செல்வி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.இளங்கோ, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ராமமூர்த்தி, கருவூல கணக்காளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.லெனின், வரு வாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் டி.தங்கப்பன், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. குணசேகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தெ.வாசுகி பேசினார் வரவேற்பு குழு செயலாளர் வி வெங்கடேசன் நன்றி கூறினார். தீர்மானங்கள் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்கவேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புறநூலகர், வருவாய் கிராம உதவியாளர், எம்ஆர்பி செவிலியர், பன்நோக்கு மருத்துவமனை பணியாளர் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், நகராட்சி, மாநகராட்சி ஊழியர்கள், ஊராட்சி செயல ருக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக்குழுதேர்வு சங்கத்தின் மாவட்ட தலைவராக கே.பூங்குழலி, செயலாளராக சா.முகமது உசேன், பொருளாளராக வே. விக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.