சென்னை, அக். 28 - மதுரவாயல் தொகுதியில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் மதுரவாயல் பகுதி 14வது மாநாடு ஞாயி றன்று (அக்.27) நெற் கன்றத்தில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், அரசு உள்ளிட்ட நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடி யிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வாரிய வீடுகளுக்கு கிரையப்பத்திரம் வழங்க வேண்டும், வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பட்டேல் சாலை, மந்தைவெளி பகுதி குடியிருப்புகளை அகற்றக்கூடாது, மதுரவாயல் பகுதியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் பி.ஏபெல் ஏற்றினார். பொதுமாநாட்டிற்கு தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.பிச்சையம்மாள் வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் கே.தண்டபாணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை பகுதிச் செயலாளர் வி.தாமசும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியமும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், எஸ்.வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் மாவை. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு 13 பேர் கொண்ட பகுதிக் குழுவின் செயலாளராக டி.அரவிந்தன் தேர்வு செய்யப்பட்டார்.