districts

img

அரசு கலைக்கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க எஸ்.எப்.ஐ வலியுறுத்தல்

சென்னை, ஜன. 19- சென்னையில் புதிதான அமைக்கப்படும் அரசு கலைக்கல்லூரிகளின் கட்டு மான பணிகளை விரைந்து  முடித்து அடுத்த கல்வி யாண்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசு உயர்கல்வி துறை கடந்த 2018-19 கல்வி  ஆண்டில் புதிதாக 264 பாடப் பிரிவுகளை அறிமுகப்படுத்தி அரசாணை (நிலை) எண்  120 வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அறிமுகப்படுத் தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டு வதற்காக தமிழ்நாடு முழு வதும் 54 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலிடப்பட்டு புதிதாக 331 வகுப்பறைகள். 50  ஆய்வங்கள் கட்டுவதற்காக கடந்த 2018-19 கல்வி யாண்டில் 78.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டப்பட்டது. தமிழக அரசு உயர் கல்வித் (டி1) துறை அர சாணை வெளியிட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை  ஆர்.கே. நகர் கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் தரை மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரியில் பாதி கட்டு மான பணிகள் மட்டுமே நிறை வடைந்துள்ளது. எனவே கட்டுமான பணிகளை விரை வில் முடித்து அடுத்த கல்வி  ஆண்டிற்குள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம்  வடசென்னை மாவட்டக்குழு  சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செய லாளர் நித்திஷ், துணைச் செயலாளர்கள் குணா, அகல்யா, துணைத் தலைவர் ரோஸ்மேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நீர்வேஸ், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.