விழுப்புரம், ஏப். 10 - தேசிய அளவில் நடை பெற்ற மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் தங்கம் வென்றார். அவருக்கு விழுப் புரத்தில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேசிய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டி ஏப்.3 முதல் 6ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம், குஷால் தாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. 51 பல்கலைக்கழக அணிகள் பங்குபெற்ற இந்தப் போட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பல்கலைகழக அணிகளும் கலந்து கொண்டன. இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மல்லர் கம்பம் தனித்திறன் போட்டியில் பங்கேற்ற ஹேமச்சந்திரன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் அண்ணா கலைக் கல்லூரியில் இரண்டா மாண்டு இளநிலை பொரு ளாதாரம் பயின்று வரு கிறார். பதக்கத்துடன் சனிக் கிழமையன்று (ஏப்.10) விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த ஹேமச்சந்திரனுக்கு தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம், அண்ணா கலைக் கல்லூரி, விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் ஆகியவை ஒன்றிணைந்து வரவேற்பளித்தன.