திருவள்ளூர், ஜூலை 7- பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுவதால், கோங்கல்மேடு பகுதியில் வாழும் மலைக்குறவன் இன மக்களுக்கு பழங்குடியினர் இனச் சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகில் உள்ள ஈகுவார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் 20 க்கும் மேற்பட்ட மலைக்குறவன் குடும்பங் களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இங்கு வாழும் முதியோர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பழங்குடியினர் இனச் சான்றிதழை இது வரை கிடைக்கவில்லை. பலமுறை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகி யோருக்கு மனு அளித்தும் அதிகாரி கள் வழங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்க ளின் கல்வி இடையிலேயே தடைப் படுகிறது. இனச்சான்று கிடைக்காததால் உயர் கல்வி வேலை வாய்ப்பும், இட ஒதுக்கீடு சலுகைகளும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. அரசு கல்வி நிறுவனங்க ளிலேயே கல்விக்கான கட்டணங்கள் முழுமையாக செலுத்த முடியாத அவல நிலை தொடர்கிறது. குறிப்பாக குறவன் இன பெண்க ளுக்கு கல்வி பெறும் உரிமை மறுக்கப் படுகிறது. இதனால் இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் நடைபெறு வது வழக்கமாக உள்ளது. இப்படி சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு நிலையுள்ளது. கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மலைக்குறவன் மக்களுக்கு பழங்குடி யினர் இனச் சான்றிதழ் வழங்கியது போல அதே வட்டத்திற்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் வாழும் மலை க்குறவன் இன மக்களுக்கு பழங்குடி இனச்சான்றிதழை பொன்னேரி கோட்டாட்சியர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்திற்கு சாந்தி தலைமை தாங்கினார். இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு சிறப்புரையாற்றினார். இதில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் ப.லோகநாதன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் நிர்வாகி வசந்த் பௌத்தன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.