districts

img

தொழில் வரியிலிருந்து விலக்கு தையல் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை, செப். 29 - தொழில் வரியிலிருந்து தையல் கடை களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் தையல் தொழி லாளர்கள் சங்கத்தின் துறைமுகம் பகுதி 18ஆம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (செப். 29) நடைபெற்றது. இந்த மாநாட்டில், தையல் கடை களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும், நல வாரியத்திற்கு தேவை யான நிதியை அரசு ஒதுக்க வேண்டும், நல வாரிய பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதித் தலைவர் எம்.பிரித்திவ் ராஜ் (எ) பிரதிவ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் கே.எஸ். செல்வராஜ் கொடி யேற்றினார். ஏ.குமார் வரவேற்றார். பகுதி துணைத் தலைவர் எஸ்.நடேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செய லாளர் வி.குமார் பேரவையை தொடங்கி வைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை பகுதிச் செயலாளர் எம்.குண சேகரனும், வரவு செலவு அறிக்கையை கே.எஸ்.ஜீவானந்தமும் சமர்ப்பித்தனர். சிஐடியு மத்தியசென்னை மாவட்ட துணைத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், துணைச்செயலாளர் ஆர்.அருள் குமார், தையல் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆனந்தன், அமைப்புசாரா சங்க மாவட்டப் பொருளாளர் கே.சுகுமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளன தலைவர் பி.சுந்தரம் நிறைவுரையாற்றினார். டி.சந்தர் நன்றி கூறினார். தலைவராக பிரதிவ், செயலாளராக எம்.குணசேகர், பொருளாளராக ஏ.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.