districts

கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கும்பல் கைது

செங்கல்பட்டு, ஜூன் 11-

      நந்திவரம், கூடு வாஞ்சேரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி, பைக் திருட்டு, வீடு புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.

      கூடுவாஞ்சேரி பகுதி யில் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தி வரம் பெரியார் நகரை சேர்ந்த விஜய் பீட்டர், நந்தி வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த இப்ராஹிம், சென்னை பூக்கடை பகுதியை சேர்ந்த சூர்யா என்ற கொசுறு சூர்யா, வள சரவாக்கம் ஷேக் அப்துல்லா நகரை சேர்ந்த பிரசாந்த், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் ஆகிய 5 பேரை காவல்  துறையினர் கைது செய்த னர். இதில் பிரசாந்த் மீது சென்னையில் மட்டும் கொலை, கொள்ளை என 5 வழக்குகள் நிலுவை யில் உள்ளது குறிப்பிடத் தக்கது. மேலும் பல்வேறு வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக பரத், மணிகண்டன், பால சந்தர் ஆகிய பேரை போலீ சார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், பட்டாகத்தி, மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது.