மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம், 1, 2, 3 வட்டக் கிளைகள் சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிறன்று (பிப்.11) அனகாபுத்தூரில் நடைபெற்றது. பல்லாவரம் பகுதிக்குழு உறுப்பி னர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம், 3வது வட்ட கிளைச் செயலாளர் எஸ்.வெங்கட் 25ஆயிரம் ரூபாய் வழங்கினார். பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.சந்திரன், ப.ரேவதி, கிளைச் செயலாளர்கள் எஸ்.மோகன் (2வது வட்டம்) உள்ளிட்டோர் பேசினர்.