districts

மனிதநேயம் அறக்கட்டளையின் இலவச பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, ஆக. 28- அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு 2) பதவிக்கு தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வு பயிற்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் மற்றும் மனித நேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்விய கத்துடன் இணைந்து இலவச பயிற்சி அளிக்க  உள்ளது. இதுகுறித்து பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மனிதநேய அறக்கட் டளை தலைவர் சைதை துரைசாமி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தற்போது டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள 50 அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் நிலை -2 பதவிக்கு 6.11. 21 அன்று நடை பெறும் முதல் நிலைத் தேர்வுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் மற்றும் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகத்துடன் இணைந்து இதற்கான பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இப்பயிற்சி வகுப்பு 6.9.21 அன்று முதல் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் 30.8.2021  முதல் 5.9.2021 வரை எண். 28, முதல் பிரதான  சாலை, சி.ஐ.டி நகர், சென்னை - 35 என்ற முக வரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டண மில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகத்திற்கு பாஸ் போர்ட் சைஸ் புகைப்படத்துடன், நேரிலோ, தொலைபேசி - 044-24358373 , 24330952, 8428431107 மூலமாகவோ அல்லது தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவல கத்திலோ அல்லது www.barcouncilof tamilnadupuducherry.org பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;