விழுப்புரம், ஜூன்.8- விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களுக்கு குறுஞ் செய்திகள் மூலம் தவறான தகவல்களைத் தெரிவித்து பல்வேறு மோசடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிய வருகிறது. இதுபோன்ற நபர்கள் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலமாக எந்தத் தகவல்களைத் தெரிவித்தாலும் யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தகவல்கள் வந்தால் உடனடி யாக காவல் துறையில் அந்த நபர்கள் குறித்து மீது புகார் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.