districts

புதையல் என போலி தங்கக்காசு மோசடி

விழுப்புரம்,ஜன.11- புதையல் என்று கூறி போலி தங்கக்காசுகளை கொடுத்து ரூ.7 லட்சம் மோசடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் தனியார் போக்குவரத்து உரிமை யாளர் புகார் செய்தார். விழுப்புரம் மாவட்டம், பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி மகன் அழகு நாதன்(வயது 39), டிராவல்ஸ் உரிமை யாளரான இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கர்நாடகா மாநிலம் ஆர்கானல் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரமேஷ் (40) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னிடம் வேன் ஓட்டு நராக சேர்ந்ததாகவும்  அவரது நண்பருக்கு பெங்களூருவில் புதையில் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான தங்க காசுகள் அதில் உள்ளதால், அதை குறைந்த விலைக்கு வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய தாக புகார் அளித்துள்ளார். தங்கக்காசு எனக்கூறி, 600 கிராம் போலி காசு கொடுத்து ஏமாற்றிய ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.