சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணா மலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி; காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவை அறிவித்து மார்ச் 15 அன்று உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், புதிதாக உருவாகும் 4 மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்கிறது.