சென்னை, டிச.23- எம்.எஸ்.எம்.இ என்று அழைக்கப்படும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்கப்போவதாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறி வித்துள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தில் 6 லட்சம் வைப்பீட்டாளர்கள் சுமார் ரூ. 32,000 கோடியை செலுத்தியுள்ளனர். வங்கி சாரா நிதி நிறுவனமான இது 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை ரூ.75,000 கோடி யாக அதிகரிக்க விரும்புகிறது என்று நிறுவ னத்தின் செயல் துணைத் தலைவர் உமேஷ் ரேவங்கர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் வைப்பீட்டாளர்களுக்கு 8.4 விழுக்காடு வட்டியும், மூத்த குடி மக்களுக்கு 0.5 விழுக்காடு கூடுதலாகவும் வழங்குகிறது. டெபாசிட் செய்தவர்களில் 65 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாகன ஓட்டுநர்களாக மற்றொருவரிடம் பணியாற்றுவோர் கடன் பெற்று சொந்த மாக வாகனத்தை வாங்கி தொழில் செய்ய ஊக்குவிப்பதாக கூறிய அவர், இத்தகைய முறைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தமது நிறுவனத்தின் கடன் உதவியால் பலர் வாகன உரிiயாளர்களாக மாறியுள்ள தாகவும் கூறினார். பெரும்பாலும் பயன்படுத்தப்படும் டிரக்குகளுக்கு வாகனக்கடன் வழங்கு வதில் முன்னணிணி உள்ள நிறுவனம் இதுவாகும். இருசக்கர வாகன கடன்களில் 97 விழுக்காடு திருப்பிச்செலுத்தப்படு வதாகவும் அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் கடன் வாங்கியோர் அதனை திருப்பிச்செல்லும் விகிதம் அதிக மாக உள்ளதாகவும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.எஸ்.சக்கரவர்த்தி கூறினார்.