districts

img

விஜயகாந்த் நினைவகம் அருகே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்

சென்னை, அக். 29 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  விருகம்பாக்கம் பகுதி 11வது மாநாட்டு கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிறன்று (அக்.28) கோயம்பேட்டில் நடை பெற்றது. கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை கல்வி வளாகமாக மாற்ற வேண்டும், விஜயகாந்த் நினைவிடம் அருகே  நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்,  கே.கே.நகர், நடேசன் நகர் மருத்துவமனை களை மேம்படுத்த வேண்டும், குடியிருப்பு களுக்கு பட்டா, விற்பனை பத்திரம் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தலைவர்கள் பேசினர். இந்தக் கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பி னர் ஜெ.வினோத் தலைமை தாங்கினார்.  கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரரா சன், தென்சென்னை மாவட்டச் செயலாளர்  ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கள் ச.லெனின், பா.பாலகிருஷ்ணன், பகுதிச்  செயலாளர் ஏ.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல் வராயன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஏ.செல்வராஜ், தீ.விஜயகுமாரி, எஸ்.கந்தன், ஆர்.பிரகாஷ், ச.ஆனந்தகுமார், கா.சரத்குமார், வி.கார்த்திக், ர.நிரஞ்சனா உள்ளிட்டோர் பேசினர். கிளைச் செயலாளர் ஜீ.மோகன்ராஜ் நன்றி கூறினார்.