வேலூர், டிச.1 - கனமழையால் வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் தொடங்கும் உத்தர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடு வதால் காளியம்மன் பட்டி, வண்றந்தாங்கல் மற்றும் ஒடுகத்தூரிலிருந்து நேமந்தபுரம் செல்லும் மூன்று தரைப்பாலங்கள் முழுமையாக மூழ்கியுள்ளன. உத்தர காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் அகரம், குருவராஜ பாளையம், நேமந்தபுரம் மக்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு வருவாய்த்துறை சார்பில் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்களை மீட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் இறங்காமல் இருக்க காவல்துறை, தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற கீழ் அரசம்பட்டு அருகே செல்லும் நாகநதி யிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.