பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. இதில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றோரம் சென்று ஆற்று வெள்ளைத்தை படம் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ, ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்றோரம் ஓட்டிச் செல்லவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலாற்றை ஒட்டியுள்ள கிராமங்களான மணப்பாக்கம், உதயம் பாக்கம், ஆனூர், வல்லிபுரம், பாண்டூர், பாக்கம், விளாகம், எடையாத்தூர், நெரும்பூர், இரும்புலிச்சேரி, அட்டவட்டம், நல்லாத்தூர், ஆயப்பாக்கம், வாயலூர் ஆகிய கிராம மக்களுக்கு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.