திருவண்ணாமலை,பிப்.15- திருவண்ணாமலை ஒன்றியம், ஆண்டி யாபாளையம் கிராமத்தில், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் சார்பில் ஜன.28 ஆம் தேதி கோடியேற்றுவிழா நடைபெற்றது. அன்று இரவே சமூக விரோதிகள் சிலர், அந்த கொடிக்கம்பத்தை அகற்றி எடுத்துச் சென்ற னர். அந்த கயவர்களை கைது செய்து, செங்கொடிக் கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வலியுறுத்தி, ஜன 29 அன்று வெறையூர் காவல் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சி யர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, கொடிக்கம்பத்தை கண்டுபிடித்து மீட்டு கொடுப்போம் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இந்நிலையில் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட செங்கொடி கம்பத்தை சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பலராமன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ரஜினி ஏழுமலை, செந்தில், லட்சுமணன், அசோகன், தருமன், பிரபாகர், சக்கரவர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.