districts

பழவேற்காடு அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

பொன்னேரி,நவ.22- பழவேற்காடு அருகே உள்ள அவுரிவாக் கம் மேல்குப்பம் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர்.  இவர்கள் மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள், கூட்டுத்தொழில் முறை யில் 2 நாளுக்கு ஒரு முறை பழவேற்காடு ஏரி யில் கூட்டாக மீன்பிடித்து வருவதை வழக்க மாக கொண்டுள்ளனர். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பழவேற் காடு ஏரியில் தனக்கு தனி பாடு பிரித்து தர வேண்டும் என கிராம நிர்வாகிகளிடம் கேட்ட தாகவும், அதற்கு கூட்டாக இருந்து தொழில் செய்வதுதான் நமது பாரம்பரியம் என நிர்வாகிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சம்மதம் தெரிவிக்காத அந்த நபர், கிராம நிர்வாகிகள் மீது திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், கிராம நிர்வாகிகள் மீதும், மீன வர்கள் மீதும் காவல்நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்துள்ளார். இதனை க்கண்டித்து, தனிநபரின் செயலால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மீனவர்கள் காவல்நிலையம் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் மதி வாணனிடமும் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மீனவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத் தில் மனு அளிக்க திரண்டு வந்து முற்றுகை யிட்டனர். அப்போது, பொன்னேரி கோட்டாட் சியரின் நேர்முக உதவியாளர் செல்வ குமார் கிராம மக்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இரு தரப்பினரின் வாதங்களை கேட்டு சமாதான பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய ப்படும் எனவும் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய தன் பேரில் முற்றுகையில் ஈடுபட்ட மீன வர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.