சென்னை, ஏப்.16- சென்னை புளியந் தோப்பு பகுதியில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சென்னை சவுகார் பேட்டை மின்ட் தெருவில் வசிப்பவர் தீபக் ஜெயின் (26). இவர் புளியந்தோப்பு பாபு தெருவில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பெயிண்ட் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் செவ்வா யன்று (ஏப். 16) காலை திடீரென அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற் கும் தகவல் அளித்தனர். வேப்பேரி மற்றும் வியாசர்பாடி தீயணைப்பு நிலையங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்த னர். இதுகுறித்து புளியந் தோப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.